Friday, September 21, 2012

முக்தி தரும் பதிகள்!

* பிறக்க முக்தி -  திருவாரூர்

*இறக்க முக்தி - காசி
 

*நினைக்க முக்தி - திருவண்ணாமலை

*தரிசிக்க முக்தி - சிதம்பரம்

*தீர்த்தமடை முக்தி -  வேதாரண்யம்

*கூற முக்தி - ஆலவாய் (மதுரை)

*கேட்க முக்தி - அவிநாசி

"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"

*மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் நம்மை நோயிலிருந்து காக்கும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

*மிளகு வீக்கத்தைக் குறைக்கும்; வாதத்தை அடக்கும்.

*பசியைத் தூண்டும்; சூட்டைக் குறைக்கும்.

*பொட்டாசியம், கால்சியம், ஸிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

*உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது; இதனால் ஜீரணத்தன்மை அதிகரிக்கும்.

*உலகிலேயே தலைசிறந்த மாற்று மருந்து மிளகுதான்.

*தென்னிந்தியாவில் கேரளா, மைசூர், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் மிளகு பயிரிடப்படுகிறது.

*நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் உள்ளது.

நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டுவிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சாப்பிடுவார்கள். வெளியில் தயாரிக்கப்படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் மிளகு முறிந்துவிடும்.

எனவேதான் "பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

Thanks to DINAMANI Tamil daily for this article!

வெளியுலகப் பயிற்சி அளித்த "யாத்ரா'
First Published : 16 Sep 2012 12:00:00 AM IST
பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வது எல்லோரும் அறிந்ததே. திரும்பி வந்த பிறகு அது குறித்த கட்டுரை எழுதித் தர வேண்டும் என்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்படியோர் அனுபவம் எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்?
திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் தில்லி சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் பதம்வீர் சிங், துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆஷிஷ் வச்சானி, விஞ்ஞான் பிரசார் மையத்தில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரன் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடிவிட்டு வந்திருக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டிலிருந்து சென்று சந்தித்து உரையாடிய முதல் மாணவர் குழு இதுதான்.
பயணத்தின் பெயர் "யாத்ரா 2012'. "இது வெறுமனே சுற்றுலா அல்ல; வெளி உலகப் பயிற்சி' என்கிறார் பள்ளியின் முதல்வர் க. துளசிதாசன்.
அவர் மேலும் கூறியது: "இந்தப் பயிற்சிக்கென வகுப்புகள் தொடங்கிய நாளில் இருந்தே மாணவர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கி விடுகிறோம். மொத்தமுள்ள பிளஸ் 1 மாணவர்கள் 1300 பேருக்கும் இரு நாள் ஆளுமைத் திறன் வளர்ப்புப் பயிற்சி.
தேர்வு மூலம் அதிலிருந்து 200 பேர் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் தொடர்ச்சியான பயிற்சிகள். சமூகம், அரசியல், மத- சாதிச் சிக்கல்கள், ஆட்சி, அதிகாரம், பொறுப்புகள், கடமைகள் குறித்த அத்தனை கோணங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முடிவில் அதிலிருந்து 15 மாணவர்கள், 15 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களே "யாத்ரா'வில் பங்கேற்கிறார்கள். மாணவ, மாணவிகளுக்கான உடை, உணவு, தங்குமிடம், ஆளுமைகளைச் சந்திக்கும் ஏற்பாடுகள், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் பள்ளியின் செலவு. விமான டிக்கெட்டுகளை மட்டும் பெற்றோர்கள் ஏற்கிறார்கள்' என்றார் துளசிதாசன்.
யாத்ரா சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் சிலருடன் பேசினோம்.
மாணவி ஏ. அஷ்மிதா: பள்ளிக்கூடம் என்ற வட்டத்துக்குள்ளேயே இருந்த நாங்கள், அதை விட்டு வெளியே வந்து கற்கத் தொடங்கியிருக்கிறோம். பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், "நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்' என்று சொல்லித்தான் தொடங்கி வைத்தார். பேருந்தில் சென்னை பயணம். அங்கிருந்து விமானத்தில் தில்லி.
சென்னை செல்லும் வழியில் கட்டிச் சென்ற சாப்பாட்டுடன் பேருந்து விழுப்புரம் அருகே கிராமத்தில் ஒதுங்கியது. வயல்வெளியில் மதிய உணவு. அதிகமாக இருந்த உணவுகளை வீணாக்காமல் அங்கே வேலை பார்த்த விவசாயிகளுக்குப் பகிர்ந்து வழங்கினோம். சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை சந்தித்தோம். "இந்தியாவில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே வாழ்ந்தாலும் இந்தியா நல்ல நாடுதான்' என்றார் அவர்.
தில்லியில் நகர்ப்புறம் ஒரு மாதிரியாகவும், புறநகரம் ஒரு மாதிரியாகவும் இருந்தது எங்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. பிரம்மாண்ட கட்டடங்களை அடுத்து கூரைகளைக் கொண்ட சேரிகளும் இருக்கின்றன.
யாத்ராவில் நாங்கள் கண்ட ஒவ்வொரு நிமிஷங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மாணவி சாரா ஷாஹீன்: "குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் முதல் தமிழ்நாட்டு மாணவர் குழு என்பதை அறிந்தபோது மிகவும் ஆனந்தமாக இருந்தது. நேரம் எத்தனை முக்கியமானது என்பது ராஷ்டிரபதி பவனில் உணர்ந்தோம்.
உங்களது பள்ளிப் பருவம் குறித்து கூறுங்கள் என்றபோது புன்முறுவலுடன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார் பிரணாப் முகர்ஜி.
மாசடைந்துள்ள கங்கை நதியைப் பார்த்தோம். குப்பைகளும், சேரிகளும் நிறைந்த தலைநகர் தில்லியைப் பார்த்தோம்.
ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் பதம்வீர்சிங் எங்களுடன்பேசும்போது, "யாராவது சொல்வதால் மட்டுமே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டாம். நீங்களாக முடிவெடுங்கள். அதுதான் முக்கியம்' என்று அறிவுறுத்தினார்.
17 வயதில் இப்படியொரு அனுபவம் எங்களுக்கு கிடைத்தது குறித்து எண்ணிப்பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம்'.
மாணவன் வி. கெüதம்: "நாடாளுமன்றத்துக்குள் நுழைய 3 மணி நேரம் பிடித்தது. திருச்சி சிவா எம்பி எங்களை ஒவ்வோர் இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினார். எம்பிக்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்தும் இடத்தில் எங்களையும் அமர வைத்து சாப்பிட வைத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் லாலு பிரசாத் யாதவை அழைத்து வந்து எங்களை அறிமுகப்படுத்தினார். "வாங்க, போங்க, போடு, மணக்கம் (வணக்கம்!)' எனத் தமிழில் சில சொற்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் லாலு பிரசாத்.
 விமானப் பயணமே ஓர் அனுபவம்தான். போகும்போது எதுவும் தெரியவில்லை. வரும்போது, குறிப்பாக இறங்கும்போது ஒரு குலுங்கு குலுங்கியபோது மனம் படபடவென அடித்துக் கொண்டது.
மாணவன் கே. கதிர் கிஷன்: ஐஏஎஸ் அகாதெமியில் உள்ள நூலகத்தை வாழ்நாள் முழுவதும் இருந்து படித்தாலும் படித்து முடிக்க முடியாது. அத்தனைப் பெரியது. அங்கு பதம்வீர்சிங், ஆஷிஷ் வச்சானி போன்றோரைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது மழை பிடித்துவிட்டது.
அதன்பிறகு, மாலை 4 மணிக்குத்தான் ராணுவப் பயிற்சி அகாதெமிக்குச் சென்றோம். எங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேரத்துக்குச் செல்லாததால் எங்களை அனுமதிக்கவில்லை. சற்று உள்ளே பார்த்துவிட்டுத் திரும்பவும் அனுமதிக்கவில்லை. நேரத்தில் அத்தனை கறார்.
விஞ்ஞான் பிரசார் பவனில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரனைச் சந்தித்தோம். "சூப்பர் கம்ப்யூட்டரை' எங்களுக்குக் காட்டி விளக்கினார் அவர். இவையெல்லாம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றபோது, ஏன் நாமே தயாரிக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புதிய புதிய கோணங்களில் அறிவியல் நிகழ்வுகளை, செயல்பாடுகளை விளக்கினார் வெங்கடேசுவரன்.
மாணவர்களுடன் யாத்ரா பயணத்தை ஒருங்கிணைத்துச் சென்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியது:
""இந்திராகாந்தி சுடப்பட்ட சப்தர்ஜங் இல்லத்துக்கும், காந்தியடிகள் சுடப்பட்ட பிர்லா வீட்டுக்கும் போனோம். மனம் கனத்தது. பயணத்துக்கு முன்பு வரை 58 வயதுக்காரனாக இருந்த எனக்கு திரும்பிய பிறகு 40 வயதுக்காரனாக மாறிவிட்டேன். இளம் மனங்களின் போக்கை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது.
நாட்டின் மிக உயர்ந்த நிறுவனங்களும், அவற்றை ஆளும் மிகப்பெரிய ஆளுமைகளும் தொட்டுவிடும் தூரத்தில் மாணவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்ற அரிய வாய்ப்பு உண்மையில் அரிதானதுதான். சில அதிர்வலைகளை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும். அது தொடர்ந்து வேலை செய்யும்'' என்றார் தமிழ்ச்செல்வன்.
மாணவர்களுடன் இந்தப் பயணத்தில் சென்று திரும்பிய பள்ளியின் இணைச் செயலர் டாக்டர் ப. சத்தியமூர்த்தி கூறியது:
"இரண்டாம் ஆண்டாக இந்தப் பயணம் செல்கிறோம். இரண்டு ஆண்டுகளும் நானும் சென்று வந்திருக்கிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்றோருக்கே இந்தப் பயணம் நிறைய சொல்லித் தந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களில் 30 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடிகிறது என்ற வருத்தம் மட்டுமே மேலிடுகிறது' என்றார் சத்தியமூர்த்தி.
வெறுமனே கல்விச் சுற்றுலா என்ற பெயரில் பொழுதுகளையும், பணத்தையும் வீணாக்குபவர்கள், இவர்களிடம் கொஞ்சம் தொழில்நுட்ப ஆலோசனை(!) பெற்றுச் செல்வது நல்லதென்றே தெரிகிறது.
சா.ஜெயப்பிரகாஷ் DINAMANI

Wednesday, September 12, 2012

மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க... ஈஸியா விரட்டலாம்...


இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்:
* எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம்.
* வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.
* மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும்.
* மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான்.
* சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது.
* எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும்.

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!


பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.
இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்!


சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்சிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த உதவுகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
வயிறு மந்தத்தைப் போக்கும்
உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
ரத்த அழுத்தம் கட்டுப்படும்
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
மார்பு வலி நீங்க
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு
மனநோய் குணமாகும்
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் குணமடையும்
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
கர்ப்பிணிகளுக்கு கசாயம்
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உடல் லேசாகும், வர பிரசவம் எளிதாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!


சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.
இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.
மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.

உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அசிடிட்டிக்கு என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?


அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை போக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
காய்கறி பழங்கள்
பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் "புரோமிலெய்ன்' ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.
முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.
குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.
எதை சாப்பிடக்கூடாது?
அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.
அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம். காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

ஜென் கதை


நம்பிக்கை வெற்றி தரும்!

நொபுங்கா படை தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் நொபுங்காவிடம் இல்லை. இதை அறிந்திருந்த நொபுங்காவின் படைவீரர்கள் மிகவும் அஞ்சினர். ஆனால் நொபுங்காவிற்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆகவே அவர் ஒரு ஜென் துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார். அதைக் கேட்ட ஜென் துறவி அந்த தளபதியிடம் "நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்" என்று கூறினார்.
அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர்.
சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், "நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார்.
இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது

அமாவாசையில் கிரிவலம் வந்தால் மன நிம்மதி கிடைக்கும்!


Benefits Tiruvannamalai Girivalam

சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலம் ஆகும். அடி முடி அறியா அண்ணாமலயாக மலை ரூபமாக இங்கு இறைவன் எழுந்தருளியுள்ளார். இந்த மலையை இறைவனாக நினைத்து தினந்தோறும் வலம் வருகின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்தது.
ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர் என்பது ஐதீகம்
கிரிவல பயன்கள்
கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது,உறங்கக் கூடாது என்பது ஐதீகம்.
எந்தெந்த நாட்களில் என்ன நன்மை
பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம். வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:
ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைக்கும் குழந்தை பெறுவதில் குறையுள்ள தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக கிரிவலம் வந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகேசனை வேண்டிக்கொண்டு மனதார கிரிவலம் வந்தால் நினைத்தது ஈடேரும் என்கின்றனர் முயற்சித்து பாருங்களேன்.

Friday, September 7, 2012

kambanil penmai


அருமையான பேச்சு. ரொம்ப நல்லா பேசறாங்க இந்த அம்மா. சரஸ்வதி நாக்குல குடி கொண்டு இருக்கா...வாழ்த்துக்கள்!

Wednesday, September 5, 2012

புயல் எப்படி உருவாகிறது?


புயல் எப்படி உருவாகிறது?

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.

இடி எவ்வாறு உருவாகிறது?


இடி எவ்வாறு உருவாகிறது?

மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.

இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.

உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.

மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

கி.வா.ஜ


கி.வா. என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமயச்சொற்பொழிவாளர். இவர் தமிழ் தாத்தா  .வே.சாமிநாதய்யரின் மாணாக்கராவார். இவர்கலைமகள்என்ற இலக்கிய இதழை நடத்தி, பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

1967இல் இவரதுவீரர் உலகம்என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா. பரிசை நிறுவி வழங்கி வருகிறது. இவரின் பல நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இவர் சொல்லின் செல்வராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் சிலேடை புலியாகவும் இருந்தார் என்பதற்கு சாட்சிசிரிக்க வைக்கிறார் கி.வா.என்ற புத்தகம். இது, வாகீச கலாநிதி திரு.கி.வா.ஜகன்னாதன் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு. நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, சில சிலேடைக்கவிதைகளையும் உள்ளடக்கியது. அவற்றிலிருந்து சில சுவையான நிகழ்ச்சிகள் இதோ உங்களுக்காக:
1. புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா..,
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா..
2. வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா..வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா..
குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்என்று பாராட்டிவிட்டு, அவரிடம்நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
வண்ணாரப்பேட்டையிலிருந்துஎன்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா..
அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
3.  உப்புமா    குத்துகிறதா
*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா..
'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' என குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.
கி.வா.. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார்பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.
ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார் கி.வா..!
4. இம்மை - மறுமை
கி.வா. அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா. உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
5.  தலைவனை பையனாக...?
கி.வா.ஜவை  ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா. அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா. அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார். அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
6. நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா. முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
7. வாயிலில் போடுவேன்..!
கி.வா.. விடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
8. உள்ளே வெளியே
கி.வா.ஜா தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா. எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா. கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
9. நாற்காலி மனிதன்
ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை.கி.வா. அவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள்.கி.வா. மறுத்தார்.”நீங்களே தலைவராக அமரவேண்டும்என்றார்கள் அன்பர்கள்.”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசைஎன்று கேட்டார் கி.வா..
10. தொண்டை கட்டு
தமிழ்த் தாத்தா .வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா..வை ஒரு பாட்டுப் பாடு என்றார் .வே.சா.

அப்போது கி.வா..வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'
என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் .வே.சா!